Friday, November 12, 2010
puducherry sports issue
சிபிஎம் புதுச்சேர் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- புதுச்சேரி மாநிலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் அனுமதியோடு 1994ல் ராஜீவ்காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி துவங்கப்பட்டது. கால்பந்து, ஹாக்கி, கைபந்து, தடகள விளையாட்டு, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் திறன் உள்ளவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் கடந்த 16 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கி வருகிறது. புதுச்சேரியின் 4 பிராந்திய மாணவர்களும் தங்கி பயிற்ச்சி பெற்றுவரும் நிலையில் சுகாதாரமற்ற நிலையிலும் உப்பளம் விளையாட்டு மைதானம் உள்ளது. நாள் ஓன்றுக்கு ரூ.125விதம் உணவுக்காக அரசு ஓதுக்கிறது. ஆனால் தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை அனைத்திலும் ஊழல் கேடுகளும் நீடித்து வருகிறது.
இதனால் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதுடன் இந்திய அளவில் புதுச்சேரி மாணவர்களின் விளையாட்டு திறன் குறைந்து வருகிறது.
99ஆம்ஆண்டு கல்வித்துறை +மூலம் காலப்பட்டில் 25 ஏக்கர் நிலம் ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளிக்கு கையக படுத்தப்பட்டது. மேலும் அணைத்து விளையாட்டு வசதிகள் உள்ளடக்யி மாதிரி வரைப்படமும் பொது பணித்துறையினால் வெளியிடப்பட்டது. ஆனால் நிதி ஓதுக்கியும் இது நாள் வரை விளையாட்டு மைதானம் அமைக்கப்படவில்லை மறுபுரம் ஏனாம் பகுதியில் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு திட்ட ஓதுக்கீடு ரூ.7.5 கோடி இதற்கு சுமார் 22 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி விளையாட்டு பள்ளிக்காக சுற்றுச்சுவர் கட்ட ஓதுக்கப்பட்ட ரூ 1 கோடியையும் ஏனாம் பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
ஏனாம் பகுதியில் அமையஉள்ள விiயாட்டு அரங்கம் நீச்சல் குளம் ஆகியவை மார்க்சி°ட் கட்சி வரவேற்கிறது அதே நேரத்தில் நிலம் கையகப்டுத்தப்பட்டு 11 ஆண்டுகளாகியும் புதுச்சேரி காலப்பட்டில் அமைய உள்ள விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு நிதி ஓதுக்காதது விளையாடு வீரர்களை காங்கிர° அரசு வஞ்சித்து வருகிறது.
எனவே நான்கு பிராந்தியங்களிலும சம வளர்ச்சி ஏற்படுத்தபட வேணடும்.விளையாட்டு துறைக்கு ஓதுக்கப்பட்ட நிதி அந்த நிதியை செலவு செய்தது குறித்து மாநில துணை நிலைஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சி°ட் கட்சி கேட்டுகொள்வதோடு. இதற்கு எதிராக மாணவர்கள் அணைத்து இளைஞர் அமைப்புகளும் ஓன்றுபட்டு போராட முன் வர வேண்டும். இவ்வாறு பெருமாள் கூறியுள்ளார்.
அமெரிக்க தலையீட்டை கண்டித்து
இந்திய தொழில்துறையை கபலிகரம் செய்;ய வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவை கண்டித்தும், போபால் வி~வாயு விபத்தின் குற்றவாளி ஆன்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்திய- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும். ஈராக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐம்பதாயிரம் படையினரையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும.; என்பன கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடைப்பெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணை செயலாளர் கீதநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நாரா கலைநாதன், இந்திய கம்யூனிஸ்ட்(எம்.எல்) கட்சியின் மாநில பொதுசெயலாளர் சோ.பாலசுப்ரமணியன், பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் முத்து, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் லெனின் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
இப்போராட்டத்தில் ஐந்து இடதுசாரிகட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
புதுச்சேரி நவ 8
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் இயங்கி வந்த நாடக தந்தை சங்கரதாஸ் நிகழ்கலை நாடகப்பள்ளியின் பெயரை நீக்கியதிற்க்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் சு.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் நாடக தந்தை சங்கரதாஸ் நிகழ்கலை நாடக பள்ளி இயங்கி வருகிறது. பல்கலைகழக நிர்வாகம் சங்கரதாஸ் நாடக பள்ளியின் பெயரை நீக்கியுள்ளது. தமிழ் நாடக மரபின் தந்தையாகவும் பேராசனகாவும் விளங்கிய நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் தனது வாழ்நாள் முழவதும் நாடகத்திற்காகவும ;அர்ப்பணித்து வாழ்ந்தவர். புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது நினைவிடத்தில் ஆண்டாண்டு முதல் தமிழகம் முழவதும் உள்ள எழுத்தாளர்கள் நினைவு தினத்தை கொண்டாடி வருகினறார்கள்.
இத்தகைய பெருமைக்குரிய சாங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை நீக்கியது தமிழ் பண்பாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் எதிரான நடவடிக்கை.சில நாட்களுக்கு முன்னால் வணிகவியல் துறையில் தமிழ்பாடத்திட்டம் நீக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகத்தின் முடிவை தமுஎகச கண்டிப்பதோடு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை சூட்ட வேண்டும். பல்கலைகழக முடிவை எதிர்த்து கலைஇலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்கள், அமைப்புகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று தமுஎகச அரை கூவி அழைக்கிறது.
வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச தலைவர் மீது கொலை வெறி தாக்குதல்
வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச தலைவர் மீது கொலை வெறி தாக்குதல் உதவி ஆய்வாளரை கைது செய்ய கோரி டிஒய்எப்ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச தலைவர் சந்துரு இவரது சகோதரர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராரில் போக்கு வரத்துத்துறை உதவி ஆய்வாளர் சண்முகம் தலையீட்டு தனது ஓயர்லக்ஸ் கருவியால் சந்துருவின் தம்பி சரவணனை தலையில் அடித்துள்ளார். இதில் சரவணன் தலையில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு காரணமான ஆய்வாளர் சண்முகம் மீது புகார் கொடுக்க சந்துரு பெரிய கடை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது ஆய்வளளர் தலைமையில் வந்த 20க்கும் மேற்பட்ட காவலர்கள் சந்துருவையும் அவரது சகோதரர்கள் சசிக்குமார், சரவணன் ஆகியோரை லத்தியாள் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு வலுகட்டாயமாக இழுத்துசென்று அங்கும் தாக்கியுள்ளனர். இதில் டிஓய்எப்ஐ பிரதேச தலைவர் சந்துருக்கு கை, மார்பு தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. அதே போல் அவரது சகோதரர்களுக்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடந்த இச்சம்பவத்தை மறைக்க போக்குவரத்துத்துறை உதவி ஆய்வாளர் சண்முத்தை தாக்கியதாக உண்மைக்கு மாராக சந்துரு அவரது சகோதரர்கள் மீது கொலை முயற்ச்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையின் இந்நடவடிக்கை கண்டித்தும் சந்துருவை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்து துறை சார்ந்த விசாரனை நடத்த வேண்டும். வாலிபர் சங்க தலைவர் மீது போட ப்பட்ட பொய் வழக்கை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி நேரு வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திர்க்கு டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள், டிஒய்எப்ஐ மத்திய கமிட்டி உறுப்பினர் எஸ்.ஜி. ரமே~;பாபு, முன்னால் பிரதேச தலைவர் லெனின்துரை, இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் அந்துவன், டிஒய்எப்ஐ பொருளாளர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
வாலிபர் சங்க பிரதேச நிர்வாகிகள் ஆர்.சரவணன், பி. சரவணன், அரிதாஸ், கதிரவன், தட்சணாமூர்த்தி, சண்முகம், பிரபாகரன், பாஸ்கர் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Tuesday, September 21, 2010
Friday, September 17, 2010
Tuesday, August 24, 2010
banth puducherry - medical college issue
Monday, August 23, 2010
all parties puducherry banth - medical college issue
kUj;Jt fy;Y}upia ,e;j Mz;Nl Jtq;fp khztu;Nru;f;ifia elj;j Ntz;Lk; vd;W typWj;jp ,d;W GJitapy; midj;J vjpu;fl;rpfspd; rhu;gpy; ge;J Nghuhl;lk; KO ntw;wp